கோவை : கொரோனா எதிரொலியாக அடைக்கப்பட்ட கோவில்கள் 100 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. கோவை நீலிக்கோணாம்பாளையத்திலுள்ள பச்சை நாயகி உடனமர் பட்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தில் நோய்கள் தீர சர்வ கால தோஷ நிவர்த்திக்காக காலகாலேஸ்வரர் அலங்காரத்தில் பட்டீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.