பதிவு செய்த நாள்
03
ஜூலை
2020
01:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த பிரதோஷ பூஜை ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, ஆனி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பூஜையில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்களின் வசதிக்காக, பிரதோஷ பூஜை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.