திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் வியாச பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் வியாச பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு நிகேதன் சத்சங்க மண்டபத்தில் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க வியாச பூஜைகள் துவக்கியது. வேதத்தை நான்காக வகுத்து கொடுத்தவரும், கீதையை உள்ளடக்கிய ஐந்தாவது வேதம் எனப்படும் மகாபாரதத்தை இயற்றியவரும், வேதத்தின் குருவான வியாசராஜரின் நினைவாக விழா கொண்டாடப்பட்டது. குருபரம்பரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வேத, சம்பர்தாயங்களை மதித்து, அதனை பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டுமென நித்யானந்தகிரி சுவாமிகள் அருளாசி வழங்கினார். சதாசிவகிரி சுவாமிகள் பூஜையை முன்னின்று நடத்தினார். பக்தர்கள் இன்றி எளிய முறையில் வியாச பூஜை சிறப்பாக நடந்தேரியது.