காரைக்காலில் மாங்கனி திருவிழா பஞ்சமூர்த்திகள் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2020 09:07
காரைக்கால் : காரைக்காலில் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு பரமதத்தர் இரண்டாது திருமணம் நிகழ்ச்சி மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.நேற்று முன்தினம் மாங்கனி திருவிழாவை தொடர்ந்து இரவு, பரமதத்தருக்கு பாண்டிய நாட்டில் இரண்டாம்திருமண நிகழ்ச்சி கைலாசநாதர் கோவில் மணிமண்டபத்தில் நடந்தது.பின் புனிதவதியார் புஷ்பபல்லாக்கில் பாண்டிய நாட்டுக்கு செல்லும் காட்சி நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பரமதத்தர், அவரது இரண்டாவது மனைவி மற்றும் மகளும் எதிர்சென்று புனிதவதியாரை வலம் வந்து வணங்குதலும், இல்லறம் துறந்த புனிதவதியார் பேய் வடிவத்தை ஈசனிடம் வேண்டி திருக்கயிலையத்துக்கு தலையால் நடந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அனைத்து விளக்குகளும் நிறுத்தப்பட்டது. பின் சிவதரிசனம் பயனைத்தந்தருளும் பஞ்சமூர்த்திகளும் கயிலாச வாகனரூடராய் எழுந்தருளி அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சிநடந்தது. மாங்கனி திருவிழாவை பக்தர்கள் வீட்டில் இருந்தே பார்த்திட, www.karaikaltemples.com என்ற யூடியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.