பீஹார்: பீஹாரின் புத்தகயாவில் உள்ள மடாலயத்தில் மழைக்கால துவக்கத்தை வரவேற்கும் சடங்குகள் நேற்று நடைபெற்றன. இதில் தாய்லாந்தை சேர்ந்த புத்ததுறவிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
புத்த மதத் தலைவரான தலாய்லாமாவின், 85வது பிறந்தநாள் , நேற்று நாடு முழுதும் உள்ள புத்த துறவிகளால் கொண்டாடப்பட்டது. ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள பிரதான புத்த கோவிலில், பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில், எல்லையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால், இந்த ஆண்டு கொண்டாட்டம், களையிழந்து காணப்பட்டது.