* தோல்வி தற்காலிகமான ஒன்றே. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும். * புதிய முயற்சியில் ஈடுபடும் போது, கடந்த கால அனுபவம் அளித்த பாடத்தை மறக்காதீர்கள். * தெய்வீக சக்தியை நோக்கி மனதை திருப்பினால் மகிழ்ச்சியுடன் வாழலாம். * மற்றவர்களின் உடல்பலம், பணபலம் கண்டு அஞ்சாதீர்கள். வெற்றி நோக்குடன் எதிர்நீச்சல் அடிக்க முயலுங்கள். * கடவுளின் ஒப்பற்ற படைப்பான நம்மைப் போல வேறொருவர் உலகில் இல்லை. இதை எண்ணி பெருமைப்படுங்கள். * துாங்கும் முன், அன்றைய நாளில் செய்த பணிகளை பட்டியலிடுங்கள். இது உங்களை திருத்தவும், பணி குறித்து திட்டமிடவும் துணைபுரியும். * வேகம், விவேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே நெருக்கடி நேரத்தில் தக்க பாதுகாப்பு அளிக்கும். * மகான்களின் வரலாற்றை படியுங்கள். வாழ்வில் சோதனை குறுக்கிட்டாலும் துணிவுடன் அவர்கள் போராடி வென்றதை அறிய முடியும். * வேலைக்காக வழிபாட்டைப் புறக்கணிக்க கூடாது. பணியில் ஈடுபட்டாலும் ஆழ்மனம் கடவுளைச் சிந்திக்க வேண்டும். * மனிதப்பிறவி கிடைப்பது அரிது. மீண்டும் ஒருமுறை கிடைக்காமல் போகலாம். அதனால் காலத்தை வீணாக்காமல் கடவுள் மீது எதிர்பார்ப்பில்லாத துாய அன்பு செலுத்துங்கள்.