பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் 21 அடி நீளத்தில் கரிய திருமேனியாக பெரிய பெருமாள், தென்திசை நோக்கி யோக நித்திரையில் பள்ளி கொண்டிருக்கிறார். சுவாமிக்கு ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் (ஜூலை 3) நடக்கும். இதையொட்டி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் அம்மா மண்டப படித்துறையில் இருந்து 22 தங்க குடங்களில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும். அகில், சந்தனம் கலந்த கலவையால் மூலவருக்கு ஜேஷ்டாபிஷேகம் என்னும் தைலாபிஷேகம் செய்வர். அதன்பின் உற்ஸவர் நம்பெருமாளுக்கு தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும்.