Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ... ராமர்பாதம் கோயிலுக்கு ரூ.2.60 கோடி ராமர்பாதம் கோயிலுக்கு ரூ.2.60 கோடி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைநீர் சேமிப்பு மையமாகும் கோவில் குளம்
எழுத்தின் அளவு:
மழைநீர் சேமிப்பு மையமாகும் கோவில் குளம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
12:07

 ஆவடி, நம் நாளிதழின் விழிப்புணர்வு கட்டுரைகளால், ஆவடி அருகே உள்ள கோவில் குளம், இரண்டாவது முறையாக, துார் வாரி ஆழப்படுத்தப்பட்டு வருகிறது.சென்னை, ஆவடி, கோவில்பதாகையில், பழமையான சுந்தரராஜப் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவி லின் முன்புறம், 60 சென்ட் பரப்பில், திருக்குளம் உள்ளது. இது, துார் வாரப்படாமல், உரிய பராமரிப்பின்றி காணப்பட்டது.

துார்ந்து காணப்பட்ட, பல நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, அதன் முக்கியத்துவம் குறித்து, நம் நாளிதழில், களமிறங்குவோம் நமக்கு நாமே என்ற தலைப்பில், கடந்தாண்டு, தொடர் கட்டுரைகள் வெளியாகின.இதன் எதிரொலியாக, இந்த குளத்தை துார் வார, மா.பா.அறக்கட்டளை சார்பில், 44 லட்சம் ரூபாயை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.மேலும், அரசு சார்பில், 56 லட்சம் ரூபாய் உட்பட, 1 கோடி ரூபாய் செலவில், 5 அடி ஆழத்திற்கு, குளம் துார் வாரப்பட்டது.இதையடுத்து, வடகிழக்கு பருவமழை பெய்தும், குளத்தில் போதிய நீர் தேங்கவில்லை.இந்நிலையில், குளத்தை, மேலும், 10 அடி ஆழத்திற்கு துார் வாரி, 30 அடி ஆழம் உடைய குளமாக மாற்ற, கோவில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, துார் வாரும் பணி, தீவிரமாக நடக்கிறது. அறநிலையத் துறை சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஜூனில் துார் வாரும் பணிகள் துவங்கின.கொரோனா பரவல் காரணமாக, பணிகளில் தடை ஏற்பட்டது. இருப்பினும், குறைந்த தொழிலாளர்களுடன் பணிகள் நடந்து வருகின்றன.குளம் பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால், இந்தாண்டு, அதிகப்படியான மழைநீரை தேக்கி வைக்க முடியும் என்றும், சுற்றுவட்டார பகுதியில் நீர்மட்டம் உயர முக்கிய நீராதாரமாக, இந்த குளம் விளங்கும் எனவும், கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar