இஸ்ரேல் நாட்டிலுள்ள ஒலிவ மலையில், யூதர்கள் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க விரும்புகின்றனர். இயேசு இந்த மலையில் இருந்து தான் தனது சீடர்களுக்கு பலமுறை போதனை செய்தார். மலையடிவாரத்திலுள்ள கெத்சமனே தோட்டத்தில் தான் சீடர்களுடன் ஆண்டவர் ஜெபம் செய்வர். இங்கு ஒலிவ மரங்கள் அன்று இருந்தது போலவே இப்போதும் உள்ளன. இந்த மலையிலிருந்து தான் இயேசு பரமண்டலத்திற்கு சென்றார். ஒலிவமலையில் இறங்கி, தங்கவாசல் வழியாக தேவாலயத்திற்கு போவார். அப்போது இறந்த பரிசுத்தவான்கள் உயிர்த்து, அவருடன் செல்வார்கள்,” என்று தீர்க்கதரிசிகள் சொல்லியுள்ளனர். இதன் காரணமாக உயிர்த்தெழுதலில் தங்களுக்கு முதலிடம் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். எனவே யூதர்கள் ஒலிவமலை கல்லறை தோட்டத்தில் தங்களின் உடல்களை புதைக்க விரும்புகின்றனர்.