பதிவு செய்த நாள்
10
ஜூலை
2020
03:07
தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் பேசினாலும், செயல் புரிந்தாலும், அவனை விட்டு விலகாத நிழல் போல, மகிழ்ச்சி அவனைப் பின்தொடர்ந்து செல்லும். பகை, பகையால் நீங்காது. அன்புஒன்றினாலேயேநீங்கும். உண்மை பேசுங்கள், கேட்பவர்களுக்கு முடிந்ததைக் கொடுங்கள். இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனை அடையலாம். எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான்.காற்றாடி(பட்டம்) காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது. வாழ்க்கைஎன்பது போராட்டக்களமாகவே இருக்கிறது. ஒருவரது வெற்றி, அவரிடம் தோல்வியடைந்தவருக்கு வெறுப்பை மூட்டுகிறது. அவர் வேதனையிலும் வாழ்கிறார். வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் மனதை ஒரே நிலையில் வைத்திருப்போர் இன்பமாக வாழ்வர். அறியாமையுடனும் தன்னடக்கமில்லாமலும், ஒருவன் நுõறு ஆண்டுகள் வாழ்வதைவிட, அறிவுடன் தன்நினைவோடு ஒரே நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. கோபத்தை நயத்தாலும், தீமையை நன்மையாலும், கஞ்சனை தானத்தாலும், பொய்யை உண்மையாலும் வெல்ல வேண்டும். நல்ல வழியில் நன்கு நிர்வகிக்கப்பட்ட மனம் தான் நமக்கு மாபெரும் உதவி செய்யும். தாய், தந்தை, உறவினர்களால் அந்த அளவு உதவியைச் செய்ய முடியாது. உடலையும், நாக்கையும், மனதையும் அடக்கியுள்ளவர்களே அறிவாளிகள்.
ஏழைகள் கூட மாளிகையில் வசிப்பதாக மனதில் நினைத்தால் பணக்காரர்களாகி விடுகிறார்கள். வயலுக்குத் தீமை களை; சமுதாயத்திற்கு தீமை ஆசை. ஆதலால் ஆசையில்லாதவர்களுக்குச் செய்யும் உதவி பெரும் பயனை ஏற்படுத்தும். செயலில் காட்டாமல் ஒருவன் தன்னுடைய வாயால் தேன் ஒழுகப் பேசுவது, அழகும் நிறமும் அமையப்பெற்ற மலர், வாசனை இழந்து காணப்படுவது போல் பயனற்றதாகும். நம்மால் இவ்வளவு பெரிய செயலை எப்படி செய்ய முடியும் என்று நினைத்து நல்ல செயலைச் செய்யாமல் இருந்து விடாதே. நீர் துளித் துளியாகக் கொட்டியே குடம் நிரம்பிவிடும். சிறிய இன்பத்தை விடுவதன் மூலம், பெரிய இன்பத்தை அடைய முடியும் என்றால் பெரியதற்காகச் சிறியதைவிட்டுக்கொடுப்பவன்அறிவாளி. பண்புள்ள மனிதன் இம்மை, மறுமை இரண்டிலும் ஆனந்தமடைகிறான். சமூகம் நலமுடன் வாழ வேண்டும். துக்கமும் துயரமும் நீங்க வாழ வேண்டும். சமூகத்தின் பகையான தனியுடைமை ஒழிக்கப்பட வேண்டும். உலகத்தில் ஆசையைப் போன்ற நெருப்பில்லை. வெறுப்பை போன்ற பகை இல்லை. மயக்கம் போன்ற வலை இல்லை, காமத்தைப் போன்ற புயல் இல்லை. விழிப்புடன் இருப்பவனுக்கும், அசைவற்ற மனம் உடையவனுக்கும் நன்மை தீமை என்னும் இரண்டையும் ஒதுக்கியவனுக்கும், அச்சம் எப்போதும் ஏற்படுவதில்லை. ஆழமாகவும், திறமையாகவும் படித்தல், நல்ல வார்த்தைகளைப் பேசுதல், மரியாதை யுணர்வு, அடக்கம், மனதிருப்தி, நன்றி, நல்ல அறிவுரைகளைக் கேட்டல் இவையே ஒருமனிதன்செய்தநல்லஅதிர்ஷ்டம். அடிக்கடி உதவி கேட்டு, நண்பர்களையோ, உறவுகளையோ தொந்தரவு செய்யக்கூடாது. புரிகிறதா!