Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீடுகட்ட வழிபாடு! ஒருநாளைக்கு எத்தனை முறை கடவுளை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆசைக்கு அடிபணியாதவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
03:07


அரபுநாட்டில் வசித்த குறைஷி இனத்தவர், இஸ்லாம் உருவாவதை கடுமையாகஎதிர்த்தனர். ஆனால், எதிர்ப்பையெல்லாம் மீறி வேகமாக வளர்ந்ததால், குறைஷிகள் பீதியடைந்தனர். நாயகத்தைச் சரிக்கட்டும் பணியில் இறங்கினர்.ஒருநாள் கஃபாவில் குறைஷி பிரமுகர் உத்பா பின் ரபிஆ மற்ற பிரமுகர்கள் மத்தியில், எனக்கு யோசனை பளிச்சிடுகிறது. முஹம்மதை (நபிகள் நாயகம்) நாம் ஆசை வார்த்தைகளால் மயக்கிவிடலாம். ஒருவேளை அவர் அதில் மயங்கி நம் வழிக்கு வந்துவிடுவார், என்றார்.இது மிக நல்ல யோசனை. ஆசைக்கு அடி பணியாதவர் இவ்வுலகில் யார்? என எல்லாரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். உத்பா நாயகத்தைத் தேடிச் சென்றார்.சகோதரர் மகனே! நீர் உயர்ந்த குடியில்பிறந்தவர். உம் மூதாதையரின் பெருமையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. மேலும் நீர் எங்களைச் சேர்ந்தவர். நமது தெய்வங்களையும் ஆச்சாரங்களையும் கண்டித்து நீர் பிரசாரம் செய்வதால், நமக்குள் வீண் சண்டையே ஏற்படுகிறது.

இதைச் சரிப்படுத்த சில யோசனைகளைச் சொல்கிறேன், என நாயகத்தை புகழ்ந்தார். நாயகமும் சரி சொல்லுங்கள் என்றார்உத்பாவிடம். உமக்கு பொருள் மீது விருப்பமிருந்தால், எங்களின் செல்வங்களை எல்லாம் உமது காலடியில் கொண்டு வந்து கொட்டுகிறோம். பதவி வேண்டுமென்றால், உம்மையே எங்கள் மன்னராக்கி விடுகிறோம். பெண்கள் வேண்டும் என்றால், இந்த அரபு நாட்டிலேயே சிறந்தபேரழகியை உம்மிடம் ஒப்படைக்கிறோம். இத்தனையும் வேண்டாமென்றால், உமதுமூளையில் ஏதோ கோளாறு என்று தான் நாங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால்,அதையும் ர்செய்ய வேண்டுமளவு பொருள்தருகிறோம், என்றார். அவர் இப்படி பேசியதற்காக நாயகம்கோபிக்கவில்லை. புன்னகை பூத்த முகத்துடன்,அன்பரே! எனக்கு எந்தக் கோளாறும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன், என்னை அவனதுதுõதனாக நியமித்து, உங்களை நேர்வழிப்படுத்த எனக்கு கட்டளையிட்டிருக்கிறான். அவனது திருவசனங்களைக் கேளுங்கள், என்றபடியே குர்ஆனின் 41ம் ஹாமீம் அத்தியாயத்தின் 37 திருவசனங்களை ஓதிக்காட்டினார். உத்பாவின் மனம் மாறிவிட்டது. அவர் குறைஷிகளிடம் சென்று, நாயகத்தைப் பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார். குறைஷிகள் அதை ஏற்கவில்லை. மாறாக, உத்பாவை நாயகம் தன் பேச்சாலேயே மயக்கிவிட்டார் என முடிவு கட்டினர். எனவே அவர்களில் சிலர் நாயகத்தை சந்தித்தனர். உத்பா சொன்ன அதே ஆசை வார்த்தைகளை நாயகத்திடம் உதிர்த்தனர். நாயகம், கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். எந்தச்சூழலிலும் ஆசைக்கு அடிபணியாதவராக நபிகளார் திகழ்ந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar