ஆடிப்பெருக்கன்று லட்சுமி தாயாருக்கு பால், தேன், செந்தாமரை, தானியம், சர்க்கரை பொங்கல் படைத்து பூஜை செய்ய வேண்டும். இதனால் திருமகள் மனம் குளிர்ந்துஅருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தாமரையை ஆலய வழிபாட்டுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், சர்க்கரைப் பொங்கலை ஏழைகளுக்கும் தானமாக வழங்கினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.