திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் நாளை (ஜூலை 14) ஆடிப்பூரவிழா துவங்குகிறது. திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் ஆடிப்பூரவிழா பிரசித்திப்பெற்றது. ஊரடங்கினால் இந்த ஆண்டு கொடியேற்றம் இல்லாமல் கோயில் வளாகத்தில் ஆடிப்பூர விழா நடத்தப்படுகிறது. நாளை (ஜூலை 14) விழா துவங்குகிறது. ஜூலை 17ம் தேதி மதியம் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவம் நடக்கிறது. ஜூலை 23 இரவில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாளும் சீமந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.