சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து : நிர்வாகம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2020 04:07
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெகுசிறப்புடன் நடக்கும் ஆடிஅமாவாசை விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் , வெளிமாநில பக்தர்கள் என லட்சம் பேர் தரிசனம் செய்ய வருவர். ஜூலை 20 ல் ஆடி அமாவாசை வருகிறது. ஊரடங்கால் நடக்கவிருந்த ஆடி அமாவாசை விழா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பூஜை மட்டும் நடைபெறும். பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.