பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் 209 டிசம்பரில் பாலாலய பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக பணி, ஊரடங்கால் நின்றது. தற்போது ராஜகோபுரம், சன்னதி கோபுரங்களில் சாரம் அமைத்து சீரமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கின.கடுக்காய், கரும்பு சர்க்கரை, சுண்ணாம்பு கலவையால் கோபுரங்களில் பூச்சுகள் செய்யப்படுகிறது. பணிகளை செயல் அலுவலர் ஜெயசந்தரபானு ரெட்டி ஆய்வு செய்து கூறுகையில், பழமை மாறாமல், ஆகம விதிகளுக்கு உட்பட்டு சீரமைப்பு பணி நடக்கிறது. பணிக்கு வருபவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 கண்காணிப்பு கேமராக்களால் கோயில் வளாகம் கண்காணிக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்குள் 2வது ரோப்கார் பணிகள் நிறைவடையும் என்றார்.