பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
12:07
மயிலாடுதுறை : அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், கந்தன்குடி சிவஸ்ரீ கவுரீச குருக்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க கூட்டம் நடந்தது. திருக்கடையூர் அமிர்தகடேச குருக்கள் தலைமை வகித்தார்.அகில இந்திய துணைத் தலைவர், திருநள்ளார் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார்.இதில், 50 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னை இறை பணியில் அர்ப்பணித்து, அர்ச்சகராகத் தொண்டாற்றி, மக்களுக்கு இறையருளை பெற்று தந்த, கந்தன்குடி சிவஸ்ரீ கவுரீச குருக்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி குருக்கள், மாவட்டச் செயலர் மகேஷ் குருக்கள், தரங்கை வட்ட தலைவர் மணிபட்டு குருக்கள் உட்பட சங்க நிர்வாகிகள் பலர், கவுரீச குருக்களை வாழ்த்தி பேசினர். தரங்கை வட்ட செயலர் சரவண குருக்கள் நன்றி கூறினார்.