பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
02:07
பொறுமையில் சிறந்த மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் குருவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரன் ஜூலை 30க்கு பிறகு பல முன்னேற்றங்களை தருவார். செவ்வாய் தற்போது மீன ராசியில் இருக்கிறார் அவர் ஆக.12ல் மேஷ ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார்.
குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி தடையின்றி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். ஜூலை 30க்கு பிறகு பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படையுங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை, உறவினர் கருத்துவேறுபாடு, பண இழப்பு முதலியன ஆக.12க்கு பிறகு மறையும். அதன் பிறகு செவ்வாயால் முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். விபத்து பயம் அறவே நீங்கும். திருட்டு களவு போன்ற பிரச்னைகள் மறையும்.
பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஜூலை 30க்கு பிறகு உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கப் பெறலாம். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். ஆக.12க்கு பிறகு பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானத்தை பெறுவர். சூரியனால் பொருள் விரயம் ஏற்படலாம். செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ணம், தோல், தொடர்பான நோய் ஆக.12க்கு பிறகு மறையும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஜூலை 30க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். எதிர்பாராத ஆதாயம் வர வாய்ப்புண்டு.
* வியாபாரிகள் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் அடைவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வருமானத்தைப் பெறுவர்.
* ஐ.டி., துறையினருக்கு ஜூலை30க்கு பிறகு சுக்கிரன் சிறப்பான நிலையில் இருப்பதால் சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* ஆசிரியர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.12க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். இடமாற்ற பீதி மறையும்.
* அரசியல்வாதிகள் ஆக.12க்கு பிறகு புதிய பதவிகள் பெற்று சிறப்பான பலனை காண்பர். நற்பெயர் எடுப்பர்.
* பொதுநல சேவகர்களுக்கு ஆக. 12க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும்.
* கலைஞர்கள் ஜூலை 30க்கு பிறகு முன்னேற்ற பாதையில் செல்வர்.
* விவசாயிகள் பாசிப்பயறு, கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். துவரை, கொண்டைக்கடலை, மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். ஆக. 12-க்கு பிறகு புதிய சொத்து வாஙக அனுகூலம் உண்டு. வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். ஜூலை 26க்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஆக.12க்கு பிறகு பகைவர் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகளுக்கு சனிபகவானால் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்கும் சூழல் வரலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுற நேரிடும்.
* தரகு, கமிஷன் தொழிலில் கூடுதல் கவனம் அக்கறை தேவைப்படும்.
* அரசு பணியாளர்கள் ஆக.12க்கு பிறகு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும், பளுவும் அதிகரிக்கும்.
* தனியார் துறையினருக்கு பொறுமையும், நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்களுக்கு கூடுதல் கவனம் தேவை.
* மருத்துவர்கள் விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்கள் வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.
நல்ல நாள்: ஜூலை 19,20,23,24,29,30,31 ஆக.1,2,7,8,9,10,11,15,16
கவன நாள்: ஆக.3,4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: மஞ்சள் சிவப்பு
பரிகாரம்:
* வெள்ளிக்கிழமைகளில் நாக வழிபாடு
* துர்கைக்கு ராகுகாலத்தில் நெய்தீபம்
* காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்