பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
02:07
தன்னலம் கருதாத தனுசு ராசி அன்பர்களே!
புதன் ஜூலை 27 முதல் ஆக. 12 வரை நற்பலனை வாரி வழங்குவார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சுக்கிரன்,சூரியன்,சனி,ராகு, கேது ஆகியோர் உங்கள் ராசிக்கு நட்பு கிரகம் என்பதால் அவர்களால் அதிக பாதிப்பு ஏற்படாது. குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவர் உங்களுக்கு கெடுபலன் அதிகம் தர மாட்டார். காரணம் உங்கள் ராசியான தனுசு அவருக்கு சொந்த வீடு. மேலும் குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. குருவின் பார்வையால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். புதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னை, பொருள் இழப்பு முதலியன ஜூலை26 க்கு பிறகு மறையும். அதன் பிறகு அவரால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவர், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் பெருமை காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம். ஆனாலும் குருவின் பார்வையால் நன்மை கிடைக்கும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். ஜூலை 26க்கு பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி பெறுவர். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.
உடல்நிலை சுமாராக இருக்கும். செவ்வாயால் பயணத்தின் போது கவனம் தேவை. ஆக.12க்கு பிறகு பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.
சிறப்பான பலன்கள்
* தனியார் துறை பணியாளர்களுக்கு ஜூலை 26க்கு பிறகு வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கை நிறைவேறும். எதிர்பார்த்த பதவி, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
* ஆசிரியர்களுக்கு விடாமுயற்சியால் கோரிக்கைகள் நிறைவேறும். ஆனாலும் குருவின் பார்வையால் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
* வக்கீல்களுக்கு ஜூலை 27 முதல் ஆக.12 வரை வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனை பெறலாம். புகழ், பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடை, மனச் சோர்வு ஜூலை 30க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
* விவசாயிகளுக்கு நெல், பாசிப்பயறு, மஞ்சள், சோளம் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.
* பால்பண்ணை தொழிலில் ஜூலை 26க்கு பிறகு எதிர்பார்த்ததை விட வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர்.முயற்சிக்கு தக்க பலன்கள் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம்.
* வியாபாரிகளுக்கு சனி, ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். இருப்பினும் சனியின் 3ம் பார்வை சிறப்பாக உள்ளதால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.
* தரகு, கமிஷன் தொழில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.
* அரசு பணியாளர்களுக்கு பணியில் கவனம் தேவை. முக்கிய வேலைகளை உடனுக்குடன் முடிப்பது நல்லது.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* தனியார் துறை பணியாளர்கள் ஆக.12க்கு பிறகு பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் உடனுக்குடன் செய்யவும்.
* ஐ.டி., துறையினருக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வெளியூரில் தங்க நேரிடலாம்.
* வக்கீல்கள் ஆக.12க்கு பிறகு பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அடிக்கடி வீண்அலைச்சல், உடல்நலக்குறைவு ஏற்படலாம்.
* பால்பண்ணை தொழில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.
நல்லநாள் ஜூலை 16,17,18,19,20,25,26,27,28,31 ஆக.1,2,5,6,12,13,14,15,16
கவனநாள் ஜூலை 21,22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: பச்சை, வெள்ளை
பரிகாரம்:
* சனிக்கிழமையில் நவக்கிரகங்கள் வழிபாடு
* செவ்வாயன்று ஏழைகளுக்கு துவரை தானம்
* பவுர்ணமியன்று இரவு அம்மனுக்கு நெய் தீபம்