பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
02:07
நல்ல மனம் படைத்த மகர ராசி அன்பர்களே!
குடும்ப பெரியோர்களின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ராகுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். செவ்வாய் ஆக.12 வரையும், சுக்கிரன் ஜூலை 30 வரையும், புதன் ஜூலை 26 வரையும், ஆக. 12க்கு பிறகும் நன்மையளிப்பர். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக மாத முற்பகுதில் கையிருப்பு அதிகரிக்கும். நினைத்ததை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் வசதிகள் பெருகும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. புதனால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். ஜூலை 27 முதல் ஆக. 12 வரை குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அதன் பிறகு நிலைமை சீராகும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான பலனை காண்பர். தடைபட்ட சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். கணவரின் அன்பம் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர் .புதிய பதவியும் தேடி வரும்.சுய தொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானத்தைக் காண்பர். ஜூலை 27 முதல் ஆக.12 வரை குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லாவிட்டால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். ஆக.12க்கு பிறகு பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
சிறப்பானபலன்கள்
* தொழிலதிபர்கள் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆக.12 வரை பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை இருக்காது. புதிய வியாபாரத்திற்காக அதிக முதலீடு செய்ய வேண்டாம்.
* வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபத்தை பெறுவர். பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.
* தரகு, கமிஷன் தொழிலில் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை ஏற்படும். உங்கள் ஆற்றல் பல மடங்கு மேம்படும்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
* தனியார் துறை பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர்.
* மருத்துவர்கள் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு குறையும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.12க்குள் கேட்டு பெறவும்.
* பொதுநல சேவகர்களுக்கு பெண்கள் உதவிகரமாகச் செயல்படுவர்.
* விவசாயிகள் மானாவாரிப் பயிர்கள் ள நல்ல மகசூலை காணலாம்.புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. புதிய சொத்து வாங்கலாம்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.
பண்ணை தொழில் கால்நடை மூலம் நல்ல பலனை காணலாம்
* பள்ளி,கல்லூரி மாணவர்கள் நற்பெயர் காண்பர். ஜூலை 27 – முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை ஆசிரியரின் ஆலோசனையை பெறுவது நன்மை தரும்.
சுமாரானபலன்கள்
* தொழிலதிபர்கள் ஆக.12 க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம்.
* அரசு பணியாளர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். இருப்பினும் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை.
* தனியார் துறை பணியாளர்கள் ஜூலை 27 முதல் ஆக.12 வரை முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* ஐ.டி., துறையினருக்கு ஜூலை30க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
* வக்கீல்கள் ஜூலை 27 முதல் ஆக.12 வரை எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது சிறப்பு.
* ஆசிரியர்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்
நல்ல நாள் ஜூலை 19,20,21,22,27,28,29,30 ஆகஸ்டு 3,4,7,8,9,15,16.
கவன நாள் ஜூலை 23,24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: நீலம், சிவப்பு.
பரிகாரம்:
* ஞாயிறன்று காலையில் சூரிய நமஸ்காரம்
* வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு நெய்தீபம்
* சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு