சின்னமனுார் : தேனி மாவட்டம் குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார பெருந்திருவிழாவில் வெளிமாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்பர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு திருவிழா நடைபெறுமா என்ற குழப்பம் பக்தர்களிடம் எழுந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் சனிவார பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கோயிலில் ஜூலை 18 ல் நடைபெறவிருந்த கொடியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. ஐந்து சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் நிறுத்தப்படுகின்றன. ஐதீகப்படி மற்ற வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும். பலநுாறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறை முதல் முறையாக தடைபடுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.