ஆண்டிபட்டி: கொரோனா ஊரடங்கால் ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் ஜூலை 20ல் நடக்க இருந்த ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கோயிலில் ஆடி அமாவாசை விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பர்.இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் ஜூலை 20ல் நடக்க இருந்த ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவாமிக்கு அன்றாடம் நடக்கும் பூஜைகள் அமாவாசையிலும் தொடரும்.பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.