திருப்பதி : திருமலை கோயிலை வாசனைப் பொருட்கள் கொண்டு சுத்தம் செய்யப்படும் புனிதமான கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வு திருமலை திருப்பதி கோயிலில் மிக விசேஷமாக நடத்தப்பட்டது.
வருடத்திற்கு நான்கு முறை இது போல ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வு நடைபெறும். சந்தனம்,மஞ்சள் உள்ளீட்ட மங்களகரமான வாசனைப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட சாந்தை கோவிலின் உள் மற்றும் மேற்புறத்தில் பூசி கோவிலை தண்ணீர்விட்டு சுத்தம் செய்தனர். கொரோனா காரணமாக குறைந்த ஊழியர்களே பாதுகாப்பு அம்சத்துடன் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருமஞ்சனம் முடிந்த பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.