Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வஸ்திரம் திருமலைக்கு ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா ரத்து
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா ரத்து

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
10:07

மேட்டுப்பாளையம்: கொரோனா தொடர் பிரச்னையால், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். தற்போது கொரோனா பிரச்னையால், கடந்த மார்ச் மாதம், 20 ம் தேதியிலிருந்து கோவில் அடைத்து, பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆடி குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நடைபெறும். விழாவின் நான்காம் நாள் லட்சார்ச்சனையும், 6 ம் நாள் கொடியேற்றமும், 7 ம் நாள் பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 8 ம் நாள் ஆடி குண்டம் இறங்குதல் நடைபெறும். அதை அடுத்து, 9 ம் நாள் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 10 ம் நாள் குதிரை வாகனத்தில், அம்மன் பரிவேட்டை திருவீதி உலாவும், வாண வேடிக்கையும் நடைபெறும். கோவிலில் ஆடிக்குண்டம் விழா, 15 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாக்களில், கோவை, ஈரோடு, திருப்பூர்,நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு வருகிற, 21ம் தேதி ஆடிக்குண்டம் விழா பூச்சாட்டும், 28 ம் தேதி குண்டம் விழாவும் நடைபெற இருந்தது. கொரோனா பிரச்னையால் ஆடி குண்டம் விழா, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மனுக்கு நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆனால் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி தெரிவித்தார். இருந்தபோதும் தினமும் ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து நுழைவாயில் முன்புள்ள கேட் அருகே சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar