ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமேஸ்வரம் கோயிலில் முக்கிய விழாவாக ஆடி, தை, மாசித் திருவிழா கொண்டாடப்படு கிறது. ஆடித்திருக்கல்யாண விழாவுக்கு கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றினர். தனைத்தொடர்ந்து ஜூலை 20ல் ஆடி அமாவாசை யையொட்டி தீர்த்த வாரி கொடுத்தல், ஜூலை 23 ல் ஆடித் தேரோட்டம், ஆடித்தபசு, ஜூலை 26ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாணம் நடக்க உள்ளது. கொரோனா பரவல் தடுக்க இவ்விழாக்கள் கோயிலுக்குள் நடக்க உள்ளதால், பக்தர்களுக்கு அனுமதியில்லை. விழாவை கோயில் இணையதளத்தில் காணலாம் என கோயில் இணை ஆணையர் செல்லதுரை தெரிவித்தார்.