ஆடி மாத பிறப்பு, கிருத்திகை கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2020 03:07
உடுமலை: குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காளப்பட்டி, நேரு நகர், சித்தி விநாயகர் கோவிலில் ஆடி மாத முதல் கிருத்திகை ஒட்டி முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை.