சாலமன் ராஜா ஆட்சிக்கு வரும் போது அவருக்கு இருபது வயது கூட ஆகவில்லை. தன் தந்தையார் தாவீதுவின் நல்ல அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க விரும்பினார். சாலமனின் செயல்பாட்டைக் கண்ட ஆண்டவர் மகிழ்ந்தார். ஒருநாள் இரவு கனவில் தோன்றி, ‘சாலமனே! உனக்கு என்ன வேண்டுமென்று கேள், அதை நான் அளிக்கிறேன்’ என்றார் ஆண்டவர். ‘‘என் தேவனாகிய யெகோவாவே, நான் இளைஞனாக இருக்கிறேன், எப்படி ஆட்சி செய்வதென்றே தெரியவில்லை. அதனால் உம்முடைய ஜனத்தைச் சரியான முறையில் ஆட்சி செய்வதற்கு வேண்டிய ஞானத்தை தாரும்’’ என்றார். இதைக் கேட்டு ஆண்டவர் மகிழ்ந்தார். ‘‘நீண்டகாலம் வாழ வேண்டுமென்றோ, பணம், புகழ் வேண்டுமென்றோ கேட்கவில்லை, ஞானம் வேண்டுமென்று கேட்டாய். இதுவரை யாரும் பெற்றிராத அதிக ஞானத்தை கொடுப்பேன். நீ கேட்காததை செல்வங்களையும் மகிமையையும் உனக்குக் கொடுப்பேன்’ என்றார். சாலமன் ராஜா போல ஆண்டவரிடம் ஞானவரம் கேட்டால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.