கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தவர் அந்திரேயா. இவரது சகோதரர் இயேசுவின் சீடரான பேதுரு. சகோதரரோடு சேர்ந்து அந்திரேயா மீன்பிடி தொழிலைச் செய்தார். இவர் முதலில் ஊழியப்பணி செய்யச் சென்ற இடம் ஜார்ஜியா. அங்குள்ள காக்கசீய மலையடிவாரத்தில் பணியைத் தொடங்கினார். பின் இஸ்தான்புல் சென்றார். அங்கு ஊழியப்பணி செய்ததால் சிறைத்தண்டனை பெற்று வெளியே வந்தார். அவரை மக்கள் கல்லால் அடித்தனர். பின்னர் கிரேக்கம் சென்று ஊழியத்தை தொடர்ந்தார். அதையறிந்த ரோம் மன்னர் ஏஜியேட்டஸ் எச்சரித்தார். ஆனாலும் ஊழியத்தை தொடர்ந்ததால் சிலுவை மரணம் அளிக்கப்பட்டது. மன்னரின் மனைவி மேக்ஸ்மில்லா, சகோதரன் ஸ்ராட்டோகிலிஸ் உதவியுடன் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தாள். மன்னர் குற்ற உணர்வால் தற்கொலை செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கான்ஸ்டண்டன் மன்னர் அந்திரேயாவின் எலும்புகளை எடுத்து இஸ்தான்புல் தேவாலயத்தில் வைத்தார். எலும்புகளின் ஒருபாகம் ஸ்காட்லாந்து கொண்டு செல்லப்பட்டது.