வேண்டுதல் நிறைவேறினால் தங்கள் உருவத்தையே மண்ணால் செய்து, வர்ணம் பூசி, காணிக்கையாக அளிக்கும் வழக்கம் வேதாரண்யம் அருகிலுள்ள கலிதீர்த்த அய்யனார் கோயிலில் இருக்கிறது. வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் ரோட்டை ஒட்டியுள்ள இந்த கோயிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகாக வேண்டிக் கொள்கிறார்கள். கோரிக்கை நிறைவேறியதும் தங்களுக்கு தாங்களே சிலை செய்து கோயிலில் காணிக்கையாக கொடுக்கிறார்கள். இந்த கோயிலைச்சுற்றி ஏராளமான மனிதச்சிலைகள் இருக்கின்றன.