ஆஞ்சநேயர் கையில் சரஞ்சீவி மலையை வைத்திருப்பார். கதாயுதம் வைத்திருப்பார். புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இங்கே ஆஞ்சநேயர் ஒருகையில் பாம்பும், ஒரு கையில் தட்டையான வாளும் (கடாரி) வைத்துள்ளார். இது வித்தியாசமான அமைப்பாகும். ஆஞ்சநேயர் பல மலைகளைக்கடந்தவர். அவர் மகேந்திரகிரி மலையிலிருந்து இலங்கைக்கு கிளம்பிய போது, ஒரு மிதி மிதித்து, இலங்கையை நோக்கித் தாவினார். அப்போது சிதறி ஓடிய பல பாம்புகளில் ஒன்றை பிடித்து வைத்துள்ளார் என்றும், பாம்பு பயமுள்ள கிராமப்பகுதி மக்கள் இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு, விஷ ஜந்துக்களில் பிடியிலிருந்து தப்பலாம் என்றும் நம்பிக்கை இருக்கிறது. இவரை வீர ஆஞ்சநேயர் என்கின்றார்.