காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா மிக எளிமையாக நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு மிக விமர்சையாக நடைபெறும். காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்காலில் அரசலாறு. வாஞ்சியாறு.திருமலைராயன் ஆறு உள்ளிட்ட ஆறுகள் கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் மிக விமர்சையாக நடைபெற்று வந்த ஆடிப்பெருக்கு விழா இந்த ஆண்டு மிக எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.முன்னதாக அதிகாலையில் பெண்கள் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து புதுமணத்தம்பதிகள் புத்தாடைகள் அணிந்து காவிரியாற்றில் வணங்கி சூரிய பூஜைகள் செய்து தங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர். பின்னர் புதுதாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர். மேலும் பெண்கள் பலர் ஆற்றங்கரையில் விளக்கு ஏற்றி தேங்காய், பழம் பிரசாதங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து காவிரித்தாயை வணங்கினர். ஆடிப்பெருக்கு விழாவில் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.