பதிவு செய்த நாள்
02
ஆக
2020
02:08
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கந்தசஷ்டி பாராயண துவக்க விழாவையொட்டி, பிரம்மாண்ட வேலில், கொடியேற்று விழா நடந்தது.
கருப்பர் கூட்டம், யூடியூப் சேனலில், கந்தசஷ்டி பாடலின் வரிகளை ஆபாசமாக, சித்தரித்து வெளியிட்டதால், இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்து கடவுளான முருகனுக்கு ஆதரவாக, பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் தொடர் போராட்டங்கள், நாடு முழுவதும் நடந்து வருகின்றன. தமிழக பா.ஜ., தலைமை இம்மாதம், 9ம் தேதி பா.ஜ.க., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், இந்து கடவுளான முருகன் பெருமையை போற்றும் வகையில், அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு, வேல் படம் வரைந்து, கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்யும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் துவக்கவிழா, நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. இதில் பிரம்மாண்ட வீரவேல் கம்பத்தில், பா.ஜ., கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில், பா.ஜ., கட்சியின், கோவை மாவட்ட செயலாளர் விவேகானந்தன், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் யோகேஷ், நரசிம்மநாயக்கன்பாளையம் நகர தலைவர் வேணுகோபால் மற்றும் பூபதி, செல்வராஜ், சஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.