Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ... காரமடை அரங்கநாதர் கோவிலில் யஜூர் உபாகர்மா, திருவோண வழிபாடு காரமடை அரங்கநாதர் கோவிலில் யஜூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
05:08

அயோத்தி: ஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Default Image

Next News

உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி வெள்ளி செங்கல்லை எடுத்து அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய ஐந்து பேர் மட்டும் மேடையில் இருப்பார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழைப்பிதழின் முன் பக்கத்தில், கடவுள் ராமரின் சிலை அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அழைப்பிலும் ஒரு முறை மட்டுமே செயல்படும் பாதுகாப்பு குறியீடு உள்ளது. நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து வெளியேறும் விருந்தினர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர், ‛இது ராமரின் விருப்பம் எனக் கூறியுள்ளார். இதுவரை 175 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar