பதிவு செய்த நாள்
04
ஆக
2020
11:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 12ம் தேதி, ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி, மலைக்கோவில், நுழைவு வாயிலில் வண்ணம் தீட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
திருத்தணி முருகன் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, வரும், 10ம் தேதி முதல், இம்மாதம், 14ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் தெருப்பத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகளை,‘யு டியூப்மற்றும் கோவில் இணைய தளம் மூலம், பக்தர்கள் நேரடியாக காணப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, மலைக்கோவில் மற்றும் மலைப்பாதை நுழைவு வாயிலில் உள்ள கோபுரங்களுக்கு வண்ணம் பூசும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. மேலும், மலைக்கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.