புதுடில்லி: பகவான் ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மண்ணில் அவருக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
ராமர் கோயில் பணிகளில் மோடி தவறாமல் பங்கேற்பார். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையில் முக்கிய பங்கு வகித்தார். 1991-ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போது அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி இவர் தான் குஜராத் பா.ஜ. தலைவர் என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார். மோடியிடம் நிருபர்கள் அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள் எனக்கேட்டனர். அதற்கு அவர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன் என்றார். இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார்.