Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி பூமி பூஜை: தமிழகத்தில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை ரத்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டும்: அரசிடம் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டும்: அரசிடம் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
11:08

 சென்னை : விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என, ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள், தலைமை செயலரிடம் வலியுறுத்தினர்.

வரும், 22ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பொது இடங்களில், பிரமாண்டமான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இது தொடர்பாக, ஹிந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளுடன், நேற்று தலைமை செயலகத்தில், தலைமை செயலர் சண்முகம், ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், டி.ஜி.பி., திரிபாதி, உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, இந்து தமிழர் கட்சி உட்பட, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்; கோவில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டம் முடிந்த பின், இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது: விநாயகர் சிலைகள் அமைக்க, அனுமதி அளிக்க வேண்டும். நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பது சம்பந்தமாக, அரசு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அரசு சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த வேண்டும்.

மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மதுபானம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவில்கள் மூடப்பட்டுள்ளன; அவற்றை திறக்க வேண்டும். பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து, இறைவனை வணங்கி செல்வர்.இ -- பாஸ் நடைமுறையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் கருத்துக்களை கேட்ட தலைமைச் செயலர், முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar