திருப்பூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திருப்பூர் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடி வெள்ளியை முன்னிட்டு திருப்பூர், திருநீலகண்டபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. திருப்பூர், நெசவாளர் காலனி செளடேஸ்வரியம்மன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் முத்தங்கி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல், போயம்பாளையம் மேட்டுமாரியம்மன் கோவில், பத்மாவதிபுரம் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.