பதிவு செய்த நாள்
10
ஆக
2020
02:08
மதுரை: மதுரையில் பா.ஜ., வர்த்தக பிரிவு சார்பில் பொது மக்களுக்கு கந்தசஷ்டி கவசம் புத்தகம் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. நகர் தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். மகளிரணி பொதுச்செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சீமான், சரவணன், சங்கர்,ரவி, விஷால், சதீஷ் உள்ளிட்டோர் பழங்காநத்தம், பொன்மேனி பகுதிகளில் வீடு வீடாக வழங்கினர்.நிர்வாகிகள் சுப்பிரமணியன், வெங்கடேஷ் ஏற்பாடுகளை செய்தனர். அவனியாபுரம், வில்லாபுரத்தில் திருப்பரங்குன்றம் மண்டல் தலைவர் கருப்பையா, அமைப்புசாரா அணி செயலாளர் செந்தில், 63வது வார்டு தலைவர் கார்த்திக் ஆகியோர் புத்தகங்களை வழங்கி வீடுகளில் விளக்கேற்றி சஷ்டி கவசம் படிக்க கேட்டுக் கொண்டனர்.
வேல் பூஜை: மேலுாரில் சிவகங்கை ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அணித் தலைவர் ஜெயபால் குடும்பத்தினர் மற்றும் கட்சியினரோடு கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல் பூஜை நடத்தி புத்தகங்களை வழங்கினர். கொட்டாம்பட்டியில் இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் வேல் வைத்து விளக்கேற்றிபூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடலை பாடினர். மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கும்,கடவுள்களை இழிவுபடுத்துபவர்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர். வாடிப்பட்டிசமயநல்லுாரில் பாரதீய ஹிந்து பரிவார் அமைப்பு மாவட்ட செயலாளர் போத்திராஜ் தலைமையில் வேல் வழிபாடு நடந்தது. மேற்கு ஒன்றிய தலைவர் பரஞ்ஜோதி, பா.ஜ., ஒன்றிய தலைவர் ஜெயபாண்டி, செயலாளர் முத்துப்பாண்டி பங்கேற்றனர்.