பதிவு செய்த நாள்
12
ஆக
2020
11:08
வீரபாண்டி: குண்டம் இறங்க அனுமதி இல்லாததால், மலர்தூவி பக்தர்கள் வழிபட்டனர். கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கால், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், பூசாரிகள் மட்டும் நித்ய பூஜை செய்தனர்.
கடந்த மாதம், மாநில அரசு, சில தளர்வை அறிவித்தது. இதனால், சிறு கோவில்களில், சமூக இடைவெளி, முக கவசத்துடன் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. அதேநேரம், உற்சவம் நடத்த அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு ஆடித்திருவிழா உற்சவம் நடக்காது என அறிவித்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. வழக்கமாக, வேண்டுதல் வைத்து விரதமிருக்கும் பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்படும் குண்டத்தில் இறங்குவர். அதன்படி, இன்று காலை, குண்டம் இறங்குவர். அதற்கு அனுமதி இல்லாததால், நேற்று காலை, பக்தர்கள், குண்டம் இறங்கும் இடத்தில், மஞ்சள், குங்குமம், சந்தனம் தெளித்து, வண்ண பூக்கள் தூவி, தேங்காய் பழம் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர்.