பதிவு செய்த நாள்
12
ஆக
2020
11:08
பெ.நா.பாளையம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிராமப்புறங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
துடியலூர் அருகே பன்னிமடை கிருஷ்ணசாமி கோவில், செல்வ விநாயகர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேக பூஜைகள் நடந்தன. தளர்வுகளுடன் கூடிய, ஊரடங்கு அமலில் இருப்பதால், பூஜை நிகழ்ச்சிகளில் கோவில் பூசாரி, மற்றும் கோவில் நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பங்கேற்றனர். ஆண்டுதோறும் இங்கு வழுக்கு மரம் மற்றும் உறியடித்தல் நிகழ்ச்சி நடக்கும். ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இருப்பதால், சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில், அன்னை ராஜ ராஜேஸ்வரி மாயக்கண்ணன் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.