திருப்பத்தூர: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா துவங்கியது.
இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து, தேரோட்டம், தீர்த்தவாரியும் நடைபெறும். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கோயில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிள்ளையார்பட்டி கோயிலில் நேற்று காலை பக்தர்களின்றி சதுர்த்தி விழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.