வெள்ளலூர்:வெள்ளலூரில் நடந்த நிகழ்ச்சியில், கிராம கோவில் பூசாரிகள் பேரவையில், 60 பேர் இணைந்தனர்.வெள்ளலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரவையின் கோவை மாவட்ட அமைப்பாளர் ஜெகனாதன் தலைமை வகித்தார். பூசாரிகள் நல சங்கத்திலிருந்து, பேரவையில் இணைந்த வெள்ளலூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 60 பேருக்கு ஆயுட்கால உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.தொடர்ந்து, பேரவையின் வெள்ளலூர் கிளை தலைவராக கொண்டத்து மாகாளியம்மன் கோவிலின் பொன்னுசாமி, செயலாளராக முத்துமாரியம்மன் கோவிலின் ஆனந்தன், பொருளாளராக மகாலட்சுமி அம்மன் கோவிலின் பரமேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.துணை தலைவர், துணை செயலாளர், கவுரவ ஆலோசகர் உள்ளிட்ட நிர்வாகிகளும், நியமனம் செய்யப்பட்டனர். இந்து சமய அறநிலைத்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.