மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, சிதிலம் அடைந்து ள்ள கொங்குனீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்மாவட்ட எல்லையில் கடத்தூரில் உள்ள.கொங்குனீஸ்வரர்கோயில் மிகவும் சிதிலமடைந்துகாணப்படுகிறது. பல நூற் றாண்டுகளை கடந்து வரலாற்றின் அடை யாளமாக உள்ள,இந்த கோவிலை புது ப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது " சோழமன்னர்கள் ஆட்சி காலத்தில் இந் த கோவில் கட்டப்பட்டது. மன்னர் ஆட்சி முறை, கோவிலுக்கு வழங்கப்பட்ட தான ங்கள், மற்றும் பல அரிய தகவல்கள் கோவில் சுவர்களில் கல்வெட்டுகளாக உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோவில் சிறப்புடன் இருந்தது அதற்குப் பின்பு முறையான பராமரிப்பி ன்றி, தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவிலின் வலது பக்க சுவர் பெரும்பகுதி இடிந்து விழுந்து விட்டது. மேற்கூரையும் ஆபத்தான நிலையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நினை வுச் சின்னமாக உள்ள இந்த கோவிலை பராமரித்து புதுப்பிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.