Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: சுக்கிரனால் நன்மை கடகம்: பதவி உயர்வு கடகம்: பதவி உயர்வு
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மிதுனம்: கையில் பணப்புழக்கம்
எழுத்தின் அளவு:
மிதுனம்: கையில் பணப்புழக்கம்

பதிவு செய்த நாள்

16 செப்
2020
08:09

செவ்வாய், சுக்கிரன், குரு நற்பலன் தருவர். அதோடு புதன் செப்.21 வரையும், அக்.7க்கு பிறகும் நற்பலன் தருவர். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும்.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம்.
குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூகநிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.  செப்.28க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்.7க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பிரச்னைகள் வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர்.  ஆடை, ஆபரணம் வாங்கலாம். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம்.  வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானத்தை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். பெண் காவலர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். செப்.21 –  அக். 7 வரை வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உடல்நிலை சுமாராக இருக்கும். அலைச்சல் ஏற்படும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் அதிக லாபம் கிடைக்கப் பெறுவர். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம்.
* வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறுவர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.
* அரசு ஊழியர்களுக்கு  திறமை பளிச்சிடும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை  கேட்டு பெற்று கொள்ளவும்
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நற்பலனை காணலாம். வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
* மருத்துவர்கள் உன்னத பலனை எதிர்பார்க்கலாம். வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
* வக்கீல்கள் அக்.7க்கு பிறகு சிறப்பான பலன் காண்பர்.  நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் வேலையில் திருப்தி காண்பர். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
* அரசியல்வாதிகளுக்கு  முக்கிய பொறுப்பு கிடைக்கும் .புதிய பதவியோடு பண வரவையும் காணலாம்.
* பொதுநல சேவகர்கள் திருப்திகரமாக செயல்படுவர்.  புகழ் வளர்முகமாக இருக்கும்.
* கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. பயறு வகைகள், கேழ்வரகு, கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர்.
* மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். கல்வியில் வளர்ச்சி காண்பர். முன்னேற்ற பாதையில் செல்வர். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
 
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சிலர் தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம் தேவை.
* தரகு, கமிஷன் தொழிலில் ஈடுபடுவோர் பெண்கள் வகையில் சற்று கவனமாக இருக்கவும்.
*  தனியார் துறையில் பணிபுரிவோருக்கு சக பெண் ஊழியர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்  செப்.21 –  அக்.7 வரை வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை வரலாம்.
* வக்கீல்கள் செப். 21 – அக்.7 வரை புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது கவனமுடன் செயல்படவும்.
 நல்ல நாள்: செப்.17,22,23,24,25 அக்.1,2,3,4,5,8,9,10,13,14
 கவன நாள் செப்டம்பர் 26,27,28 சந்திராஷ்டமம்
 அதிர்ஷ்ட எண்:1,3  நிறம்: சிவப்பு ,மஞ்சள்.

பரிகாரம்:

* சாப்பிடும் முன் காக்கைக்கு அன்னமிடுங்கள்.
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
* சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar