பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
இந்த மாதம் கேது மட்டும் மாதம் முழுவதும் நன்மை செய்வார். சுக்கிரன் செப். 28 வரை நன்மைகளை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். அதற்காக கவலை கொள்ளத் தேவை இல்லை காரணம் கேதுவால் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். இதனால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பண வரவு அதிகம் இருக்கும். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன், மனைவி இடையே பிணக்குகள் வரலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்கவும். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்னை, உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு, பொருள் இழப்பு முதலியன செப்.20க்கு பிறகு மறையும். அதன் பிறகு அவரால் உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். புதனால் அண்டை வீட்டார் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். உங்கள் திறமை பளிச்சிடும்.அதற்குரிய பரிசும், பாராட்டும் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும்.
உடல் நலனில் அக்கறை காட்டவேண்டியதிருக்கும். சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வயிறு பிரச்னை வரும். செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி உபாதைகள் வரலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் கேதுவால் நல்ல வளர்ச்சி காண்பர். சூரியனால் கடந்த மாதம் ஏற்பட்ட விரயம், நஷ்டம் இனி இருக்காது.
* வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் காண்பர். சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. ஆடம்பர செலவை தவிர்த்து சிக்கனமாக இருக்க வேண்டும்
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளின் ஆதரவும், அனுசணையும் வந்து சேரும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* மருத்துவர்களுக்கு சுக்கிரனால் பெண்களால் நன்மை கிடைக்கலாம்.
* ஐ.டி. துறையினர் முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகளை செப். 28க்குள் கேட்டு பெறவும்.
* அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்குடன் திகழ்வர். திடீர் வருமானத்தையும் பெறுவர்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் அதிக ஆதாயம் அடைவர்.
சுமாரான பலன்கள்
* தொழிலில் பங்குதாரர்களின் குறுக்கீடு தலைதுாக்கலாம். தொழிலாளர்களின் ஆதரவைப் பெற பணம் செலவழிக்க நேரிடும். * தரகு,கமிஷன் தொழில் தடைகளை சந்திக்கலாம். எதிர்பாராத பணஇழப்பை சந்திக்க வாய்ப்புண்டு.
* மருத்துவர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைப்பது அவசியம். .
* வக்கீல்கள் புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று விழிப்புடன் இருக்கவும்.
* ஆசிரியர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். கோரிக்கைகள் விடாமுயற்சியின் பேரில் நிறைவேறும்.
* தனியார் துறை பணியாளர்கள் அலைச்சலுக்கு ஆளாவர். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். பொறுமையும் நிதானமும் தேவை.
* ஐ.டி. துறையினருக்கு செப். 28க்கு பிறகு பளுவும், அலைச்சலும் இருக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
* அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மனக்குழப்பம் ஏற்படலாம்.
* கலைஞர்களுக்கு செப்.28க்கு பிறகு செயல் தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடும். பக்கத்து நிலத்து காரரிடம் அனுசரித்து போவது நல்லது .வழக்கு விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்
* மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. சிலருக்கு அவப்பெயர் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
நல்ல நாள்: செப். 18,19,22,23,29,30 அக். 1,2,8,9,40,11,12,15,16
கவன நாள்: அக்.3,4,5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: சிவப்பு, வெள்ளை.
பரிகாரம்:
* காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
* வெள்ளியன்று நாகதேவதை தரிசனம்
* சனியன்று அனுமனுக்கு துளசி மாலை