பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
சுக்கிரனால் உங்களுக்கு கிடைத்து கொண்டிருந்த நற்பலன் இந்த மாதம் பிற்பகுதியில் சற்று குறையலாம். அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் புதன் செப்.20 க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். அதோடு ராகுவின் நன்மைகள் தொடரும். அவரால் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். உங்களை பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி எண்ணம் மேம்படும். மேலும் குருவின் 5ம் இடத்துப் பார்வையால் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.
குடும்பத்தில் புதனால் செப். 20 வரை குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். கணவன், மனைவி இடையே சிறு பிணக்குகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.
பெண்களுக்கு தோழிகள் உதவிகரமாக இருப்பர். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். செப்.20க்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.
உடல்நிலை சுமாராக இருக்கும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
* தனியார் துறை பணியாளர்கள் செப்.20க்கு பிறகு புதனால் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினர் முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை செப். 28க்குள் கேட்டு பெறவும். .
* வக்கீல்களுக்கு செப். 20 வரை எதிர்ப்புகள் வரலாம். ஆனாலும் அதைக் கண்டு அஞ்சாமல் உழைத்தால் முன்னேற்றம் தானாகவே வரும். நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பர். செப்.20 க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
* மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையும், அறிவுரையும் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம். எனவே அவர்கள் பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது.
* வியாபாரிகள் அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு, செலவு கணக்குகளை சரியாக வைக்கவும்.
* அரசு பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ஒரு பிடிப்பு நிலை இல்லாத நிலை இருந்து வரலாம்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வேலையில் கவனம் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
* மருத்துவர்களுக்கு பணிச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
* ஆசிரியர்கள் கடந்த காலம் போல் இல்லாவிட்டாலும் பாதகமான பலன் நடக்காது. அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகளுக்கு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
* கலைஞர்களுக்கு செப்.28க்கு பிறகு போட்டியாளர்கள் வகையில் இடையூறு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
* மாணவர்களுக்கு படிப்பில் செப்.20 வரை சற்று தொய்வு ஏற்படலாம்.
நல்ல நாள்: செப்.17,18,19,24,25,26,27,28 அக்.1,2,6,7,13,14,15,16.
கவன நாள்: செப்.20,21 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,8 நிறம்: நீலம், பச்சை
பரிகாரம்:
* சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை
* வியாழனன்று தட்சிணாமூர்த்திகக்கு நெய்விளக்கு
* தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்