பதிவு செய்த நாள்
16
செப்
2020
09:09
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, புரட்டாசி சனிக் கிழமைகளில் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திவ்ய தேசங்களில் முதன்மையான, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, புரட்டாசி சனிக் கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு வருவர். கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளதால், ரெங்கநாதர் கோவிலில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே, தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும், பக்தர்கள் கூட்டமாக சேர்ந்து காத்திருப்பதை தவிர்ப்பதற்காக, கட்டணமில்லா மற்றும் கட்டண தரிசனத்துக்கு, இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, www.srirangam.org என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே, வரும், 19, ௨௬ம் தேதி, அக்டோபர், 3 மற்றும், ௧௦ம் தேதிகளில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.