Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி: பெருமாள் கோவில்களில் ... வெண்ணைகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சிநேயர் வெண்ணைகாப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
உடுமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தடை

பதிவு செய்த நாள்

19 செப்
2020
01:09

உடுமலை: உடுமலை உடுமலை ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதியில்லை, என முடிவு செய்யப்பட்டது. உடுமலை- மூணாறு ரோட்டில் உள்ள, ஏழுமலையான் வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்ல, ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும், பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதியளித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தாண்டு, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி குறித்து சிக்கல் நீடித்து வந்தது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், கட்டுப்பாடுகளுடனும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்க மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டிருந்தது.ஆனால், அடர்ந்த வனப்பகுதி, முகக்கவசம் அணிந்து, கரடு, முரடான மலைப்பாதையில் பக்தர்கள் நடக்க முடியாத சிக்கல், உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாதது ஆகிய காரணங்களினால், இந்தாண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: கோவிலுக்கு, வாரம் தோறும், 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் வரை பக்தர்கள் வரும் வாய்ப்புள்ளது. அதனால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. வழக்கம் போல், கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கும். வனத்துறை, போலீஸ் மூலம், கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஒன்பதாறு செக்போஸ்ட், சின்னாறு செக்போஸ்ட் மற்றும் ஏழுமலையான் கோவில் மலையடிவார வனப்பகுதி வழித்தடத்தில் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பப்படுவர். எனவே, பக்தர்கள் யாரும், ஏழுமலையான் கோவிலுக்கு வர வேண்டாம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar