ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராம வையக்குண்ட ஐய்யனார் கோயிலில் மழைவேண்டி கூட்டுப் பொங்கல் வழிபாடு நடந்தது. பரிவார தெய்வங்களான காளியம்மன், கருப்பண்ணசாமி, வீரபத்திரர், பைரவர் சன்னதியில் உலக நன்மைக்கான வேள்வி நடந்தது. ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிட்டனர். இரவில் காளியம்மனுக்கு ஆடு, கோழிகள் பலியிடப்பட்டு, நேர்த்திக்கடன் பூஜைகள் நிறைவேற்றப்பட்டது.கிராமத் தலைவர் ரெத்தினம், ஊராட்சித் தலைவர் தியாகராஜன், முத்துக்கிருஷ்ணன், ராஜேந்திரன், ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.