பதிவு செய்த நாள்
27
செப்
2020
06:09
அன்னூர்: பெருமாள் கோவில்களில், புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையான, நேற்று அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு திருமஞ்சனமும், பின்னர் அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பக்தர்கள் உடல் வெப்பம் பரிசோதித்த பின்னரே, கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.பொங்கலூர், வரதராஜபெருமாள் கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 700 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று தரிசித்தனர்.அன்னூர் வட்டாரத்தில், காட்டம்பட்டி, குன்னத்தூர் புதூர், பொகலூர் பெருமாள் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் முன்புறம் தாசர்களுக்கு, அரிசி மற்றும் பருப்பு வகைகளை, பக்தர்கள் படைத்தனர்.