ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ர சயனர் சன்னதியில் பெரியபெருமாள் திருவோண உற்ஸவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4:00 மணிக்கு பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளங்கோவன் செய்தார்.